Friday 25 August 2023

பாரதி கலைமன்றத்தின் 41 வது ஆண்டு நிறைவு விழா.

​பாரதி கலை மன்றத்தின் 41 வது ஆண்டு நிறைவு விழா 26 / 08 / 2023 அன்று . 

Tuesday 21 June 2022

பாரதி கலை மன்றத்தின் 40 வது ஆண்டு நிறைவவு

 பாரதி கலை மன்றத்தின் 40 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் நோக்கில் எதிர் வரும் 23 July 2022 அன்று வேறுபட்ட கலை நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Thursday 12 August 2021


 

Saturday 29 May 2021

 

பாரதிகலை மன்றத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமரர்.மு.போதிராஜ் ஞாபகர்த்தமாக ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான முகாம்,திரு.பி. உமேஸ் பிரசாந்த் தலைமையில் பாரதி முன்பள்ளி வளாகத்தில்,23.05.2021 அன்று 33 குருதிக்கொடையாளர்களின் உன்னத பங்களிப்புடன் இனிதே நிறைவடைந்தது.இதற்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு நல்கியோர்க்கு மனமார்ந்த நன்றிகள்

Saturday 24 April 2021

ஊக்குவிப்பு

 பிரான்ஸ் வாழ் பாரதி கலை மன்ற ஸ்தாபகத்தின் இரண்டாவது தலைவர் திரு.கனகசூரியர் ஸ்ரீதரன் அவர்களும், எமது மன்ற உறுப்பினர் திரு.சின்னையா கெங்காதரன் அவர்களும்   மிக நீண்ட காலமாக எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் கரிசனை கொண்டிருப்பவரும்,  கலைமன்ற நலன் விரும்பியுமாகிய திரு. பால்சிங்கம் சுமன்   அவர்களும் பிரான்ஸ் வாழ் கலைமன்ற நலன் விரும்பிகளுடன் இணைந்து எமது அறநெறி கல்விக்கும், கலைத்துறை பயிற்சி வகுப்புகளிற்கும் உதவ முன்வந்துள்ளனர்.அவர்களின் காலத்தின் தேவை அறிந்த முயற்சியை வரவேற்பத்துடன் அவர்களின் முயற்ச்சிக்கு துணையாக இருந்து எமது மன்றம் அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள ஆவலாகவுள்ளது. 

     பிரான்ஸ் வாழ் மன்ற நலன் விரும்பிகள் மேலும் பலர் இந்த முயற்சியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெறுவதனால்  மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

       அறநெறிக் கல்வியை போதிப்பதற்கும் , சங்கீத வகுப்பினை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.      


Thursday 22 April 2021

விக்ரோறியாக் கல்லூரி இரத்த தானம்

 வழமைபோல இவ்வருடமும்

குருதிக்கொடையளித்த
விக்ரோறியாக் கல்லூரி உயர்தர மாணவர்கள்
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
2019 விக்ரோறியாக் கல்லூரி மாணவர் ஓன்றியமும்
2021 மாணவர் ஓன்றியமும்
இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் இன்று(21/4/2021)
கல்லூரியின் சிவபாதசுந்தரனார் மண்டபத்தில்
சிறப்புற அதிபர் திருமதி சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் தலைமையில்
உயர்தரப்பிரிவு பகுதித்தலைவர்
திரு.பொ.ஈஸ்வரன் வழிகாட்டலில் நடைபெற்றது.
வைத்தியகலாநிதி திருமதி குருபரன் அவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினார். பழைய மாணவர்கள்
2019 A/L பிரிவு, 2020 A/L பிரிவு 2021A/L பிரிவு
மாணவர்கள் ஏராளமானோர்
கல்லூரி ஆசிரியர்கள்
குருதிக்கொடையளித்தனர்.

Tuesday 20 April 2021

 பாரதி கலை மன்ற செயற் குழு-2021 

  1. தலைவர் :                திரு.பிரவீண்சுபராஜ்   உமேஷ்பிரசாந்
  2. உப-தலைவர் :      திரு.விஜயகுமார் சூரியப்பிரகாஷ் 
  3. செயலாளர் :          செல்வி . கிருஷா ஒற்றியூரான் 
  4. உப-செயலாளர் : செல்வி. பானுஷா பார்த்தீபன் 
  5. பொருளாளர் :       திரு.பொன்குணரத்தினம் இன்னிசைத்தமிழன் 

          பொறுப்பாளர்கள் :-

     6.இந்து விவகாரம் :           செல்வி.ருக்ஸனிகா பாவாநந்தன் 

     7.கலைத்துறை :                  செல்வி.மோகனப்பிரியா சுதாகரன் 

     8.விளையாட்டுத் துறை: திரு,செந்தில்நாதன் வைஷ்ணவப்பிரகாஷ் 

     9.முன்பள்ளி :                         திரு.துரைசிங்கம் இரவீந்திரன் 

    10. பத்திராதிபர் :                  செல்வி.கலக்க்ஷனா சின்னத்துரை 

உறுப்பினர்கள் :-

    11. திருமதி. ருபதாஸ் தயாளினி

    12. திரு.சிவசுப்பிரமணியம் சிவராகவன் 

    13. திரு.கருணாகரன்.பிரதீபன் 

    14. திரு.சிவகுமார் பிரணவன் 

    15. திரு .தட்சணாமூர்த்தி உதயகுமார் 

Tuesday 16 February 2021

 பாரதி முன்பள்ளியில் சிறார்களாக கற்று, பாடசாலை முகிழ் நிலை மாணவர்களாக 2021 இல் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான சிறப்பிப்பு நிகழ்வு 14 Feb 2021 அன்று பிற்பகல் பாரதி முன்பள்ளியில் இடம்பெற்றது. பாடசாலை முகிழ்  நிலையில் 31 மாணவர்கள் இச் சிறப்பை பெற்றுக்கொண்டனர். திரு.வி .உமாபதி, மகப்பேற்று வைத்திய நிபுணர்  கு.சுஜாகரன் ஆகியோரின் அனுசரணையுடன் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரிய ர்களுடன் மாணவர்களும், சிறார்களும் ,அவர்தம் பெற்றோர்களும், முன்பள்ளி சமூகத்தினரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.  முகிழ்  நிலை மனவர்களிற்க்கான கௌரவிப்பு அங்கிகள் அணிவிக்கப்பெற்று ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் முன்றலில் இருந்து மாணவர்கள் அணியாக அழைத்துவரப்பெற்றனர். முன்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வில் முகிழ் நிலை  மாணவர்களுக்கான வாழ்த்துரைகளும் , ஆசிரியர்களிற்க்கான கௌரவிப்புகளும், முகிழ் நிலை மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றன.

Thursday 28 May 2020

தேடல்.....28/05/2020

      பாரதி கலை மன்றத்தின் வரலாற்றுத் தடங்களில் இருந்து பதிவு ஒன்றினை ஓர் அன்பர் கேட்டார். தேடினேன்... அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. எத்தனையோ எமது பாரதி சமூகம் சார்ந்த விடயங்கள் இருந்த போதிலும் அவர் எதிர்பார்த்ததனை எம்மால் வழங்க இயலவில்லை என்பது கவலையான விடயம் தான். இருப்பினும் கவலைகளுடன் வாழ்வதனையும் விட எதிர்காலத்திலாவது இப்படியான கவலைகள் இன்றிய வாழ்வு அமையாதா? என எண்ணினோம். எவரையும்எதிர்பாராமல் விட்ட பணியை தொடர்வது என தீர்மானித்தோம். தொடர்வோம்.                " கலைமன்றம்" எனும் பதத்தினை பயன்படுத்துவதனை எவராவது ஆட்சேபித்தாலோ அல்லது திரைமறைவு விமர்சனங்களை முன்வைத்தாலோ எமது தலைப்பினை மாற்றுவதற்கும் தயங்கப் போவதில்லை. ஏனெனில் காலப் பதிவுகளில் பெரியதொரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இத்தளத்தின்கடந்த காலப் பதிவுகளை நோக்கும்எவரிற்கும்இதன் பெறுமதி புரியும். எந்தவொரு சமூக வலைத் தளங்களிலும் இல்லாத சிறப்பை இங்கு காண முடியும். கலை மன்றமென்றாலென்ன முன்பள்ளியென்றாலென்ன எமது கிராமம் அயல்கிராமம் என்றால் என்ன அயற்பாடசாலைகளாக இருந்தாலென்ன ஆலயங்களாக இருந்தாலென்னநன்மை - தீமைகள், துக்கம் - சந்தோசம் ,கலைத் திறன்கள் உடற்திறன்கள் எதுவாக இருந்தால் என்ன அவை அனைத்தையும்ஒரே இடத்தில் அறிந்து கொள்ள கூடிய அற்புதமான யதார்த்த நிலை ஒன்றினை இங்கு காணலாம். ஆர்வமுள்ளோர் எம்முடன் இணைந்து கொள்ளலாம்.... நன்றி.